மனிதம்

  • January 13, 2024
manidham

வண்ணத்துப்பூச்சியின் இறகுவழி
பயணித்த பனித்துளியே

நீயேதும் அதற்கு
வலிதந்திருப்பாய் என்றெண்ணி
வசவுகள் வீசிட நினைக்கிறேன்

காற்றாலை கரத்தால்
சிறகொடிந்த பறவைக்கும்
கையறுநிலை பாடும் நான்…

என்வீட்டு மின்விசிறி முறித்த
தும்பியின் இறகு வந்து
முகத்தில் அறைந்திட
தலை குனிந்தேன்

Share :
comments powered by Disqus

Related Posts

கி.ரா அவர்களின் கன்னிமை - சிறுகதை

prathebascribbles bookreview கி.ரா அவர்களின் நாற்காலி சிறுகதைத் தொகுப்பில் இருந்த கன்னிமை சிறுகதை படித்தேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி யோசனை தர, இது என்னவோ என்னை நானே பார்ப்பது போலிருந்தது.

Read More

மழைக்கால மாலை…

மழைக்கால மாலை…

Read More

மார்க்கண்டேயருக்கு மணநாள்…

மார்க்கண்டேயருக்கு மணநாள்…

Read More